Thursday, May 10, 2012

பலியானேன் பள்ளியின் நினைவுகளில்

பன்னிரண்டு வருடம் வாழ்ந்து
அனாதையானேன்.....

மழை பொழியும் இரவில்
தீப்பந்தம் ஏற்ற துடிக்கிறேன்...

கவலைகள் சூழும் நேரத்தில்
கவிதைகள் பாட ஏங்கினேன்...

மழைத்துளியை பாலைவனத்தில்
பார்த்து ரசிக்க வேண்டுகிறேன்...

இரவின் பௌர்ணமி அழகை
பகலில் பார்க்க விரும்பினேன்...

கண் மூடும் இரவில்
கண்ணீரில் தத்தளிக்கிறேன்...

கவிதைகளும் கருத்துக்களும்
அறிவுரைகளும் ஆறுதல்களும்
அரவணைப்பும் அன்பும்
துடைக்கவில்லை கண்ணீரை....

வாழ்நாள் முழுவதும்
பள்ளியில் வாழ ஏங்குகிறேன்....

பலியானேன் பள்ளியின்
நினைவுகளில்
மீளமுடியாமல்.....

:( :'(

No comments: