Thursday, May 10, 2012

உன் பதிலால்....

காற்றுக்கும் கவிதை
கற்ப்பித்தாய் உன் மூச்சால்...

கடலுக்கும் மோட்சம்
கரைத்தாய் உன் பாதத்தால்...

நிலவிற்க்கும் நிறம்
நிறைத்தாய் உன் கண்களால்...

உடலுக்கும் உண்மை
உரைத்தாய் உன் உயிரால்...

இதயத்திற்கு துடிப்பை
தந்தாய் உன் உதட்டால்...

உயிருக்கும் சிறை
வைத்தாய் உன் காதலால்...

கனவுக்கும் கலைகள்
கசிந்தாய் உன் நினைவால்...

என் காதலுக்கும் கல்லறை
கட்டினாய் உன் பதிலால்....

No comments: