Friday, May 11, 2012

கவிதையே!! அழகாகிவிட்டாய்...

மழையே !!
குளிரால் நடுங்க வைத்தாய் என்னை
நடுங்க வைப்பாள் உன்னை...


பூவே!! 
மயக்கிவிட்டாய் உன் மணத்தால் என்னை
மயங்கப்போகிறாய் அவள் மனதால்...

இயற்கையே!!
உன் அழகை வர்ணித்தேன் நான்
அவள் அழகை வர்ணிக்க வைக்கப்போகிறாய் நீ...

நிலவே!!
ஏமாற்றிவிட்டாய் என்னை
எமாற்றவருகிறாள் உன்னை...

கவிதையே!!
நீயும் அழகாகிவிட்டாய்
அவளை பொருளாகக்கொண்டு!!

No comments: