Wednesday, October 12, 2016

கண்ணாடி முன்

காலை எழுந்து கடவுளாய் தாயை தந்தையை வணங்கியவனை கண்டேன்...
பக்கத்துக்கு வீட்டில் சின்ன குழைந்தை கண்டு சிரித்தவனை கண்டேன்...
பசி என்று ஏங்கி வாசலில் நிற்பவனின் பசி போக்கியவனை
கண்டேன்
நடு ரோட்டில் கிடக்கும் கண்ணாடி துண்டுகளை அப்புறப்படுத்தியவனை
கண்டேன்...
சக ஊழியர் சோகம் கேட்டு ஆறுதல் கூறி அரவனைத்தவனை
கண்டேன்...

வீட்டை சுற்றி மரம் வளர்த்து பாசத்தோடு தண்ணீர் ஊற்றியவனை
கண்டேன்..
அதிகம் ஆசையின்றி ஆத்திரமின்றி ஆணவமின்றி
அதிகம் அன்பும் அரவணைப்பும் அமைதியும் கொண்டவனை
கண்டேன்...
அவனை கண்டு அனைவரும் அவ்வாறே வாழ்வதை கண்டேன்...
சட்டென்று விளித்துக்கொண்டேன்..
கனவென அறிந்து 

“இப்படி பட்ட மனிதரெல்லாம் கனவில் தான் வாழ்வார்கள்
என்று சொல்லி கொள்கின்றேன்
கண்ணாடி முன் நின்று முகம் பார்த்துக்கொண்டே !!”


அன்பு அமைதி அரவணைப்பு அறிவு
இவை யாவும் கனவில் அன்றி
தன்னில் தான் இருக்கிறது !!




No comments: