Thursday, May 10, 2012

தேடுகிறேன்..

தேடுகிறேன்..
வெள்ளை வானில் காதல் கவி பாடும் 
கரு நிலவை...

தேடுகிறேன்..
காதோரத்தில் உல்லாச ஊஞ்சலாடும்
தங்க விண்மீணை...

தேடுகிறேன்..
வெள்ளித்தாமரை சிரிப்பாய் சிதறும்
சிவப்பு மேகத்தை...

தேடுகிறேன்..
என் பெயரை சொல்லித் துடிக்கும்
இதய முரசை...

தேடுகிறேன்..
என்னை கட்டி அணைக்கும் இரண்டு
பொன் பூச்செண்டுகளை....

தேடுகிறேன்..
இந்த வரிகளின் பொருளை...
பொருள் தாராயோ???
என் வாழ்வில் வாராயோ????

என்னவளே!!
தேடுகிறேன்..
காதலின் மொழியை..
கொஞ்சம் சிரித்துவிடு...

No comments: