Thursday, May 10, 2012

நாங்கள் மறந்தது...

அன்னை மடி உறக்கம் இழந்து
புத்தக தலையனை சுமந்து
கனவு தூக்கம் கலைத்து
நாங்கள் கற்றது

பள்ளி தோழமை தொலைத்து
தெரு நண்பர்களை மறந்து
வீட்டை விட்டு சென்று
நாங்கள் கற்றது..

"100" எண் பொறித்த நோட்டிற்க்கு
100 படிகள் எறி
நாங்கள் கற்றது

இயற்க்கையின் காதுகலுக்குசெவுடனாய்
தனக்கு தானே எமனாய்
மாறும் அறிவியல் முன்னேற்றத்தில்
நாங்கள் கற்றது...

எலிப் பொறியில் எலியைப் போல
பொறியியல் துரையில் சிக்கினோம்
பொறியாளர்களாய்....

இன்று நாங்கள் சுமப்பது
சிறந்து விளங்கும் எங்கள் பட்டப் படிப்பு அல்ல
நாங்கள் மற்ந்த
எங்கள் பெற்றோர் பட்ட பாட்டை......